tamilnadu

img

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து 50 குழந்தைகள் படுகாயம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 50 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. மீரட் மாவட்டத்தில் சர்தானாவின் தபாத்துவா  கிராமத்தில் சரஸ்வதி க்யான் மந்திர் என்ற பள்ளிக்கூடம் இயங்கி வந்தது. இன்று வழக்கம்போல் பள்ளிக்கூடம் இயங்கியது. அப்போது  பள்ளிக்கூடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் பல  குழந்தைகள் சிக்கிக் கொண்டனர். குழந்தைகள் உடனடியாக மீட்கப்பட்டு  அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சுமார் 50 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர்.  இதில்  ஆறு குழந்தைகள் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  அலட்சியத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் ராம் அர்ஜ் தெரிவித்தார்.